வியாழன், 23 ஜூன், 2011


மனைவி :"ஏங்க, என்கிட்டே உங்களுக்கு ரொம்பப் பிடிச்சது என் அழகான முகமா, அன்பான மனமா? பணிவான குணமா?"
கணவன்  : "உன்னோட இந்தக் காமெடிதான்!"



ஆண் :  ஏதாவது ஒரு வார்த்தை சொல்லு... அதுல சந்தோஷமும் இருக்கணும்... கஷ்டமும் இருக்கணும்."

பெண் : ஐ லவ் யூ அண்ணா."

“பசி எடுக்குதா?”
“இல்லை டாக்டர்”
“காலைலே என்ன சாப்டீங்க?”
“இருபது இட்லி”
“பசி எடுக்கல்லைன்னீங்க?”
“இப்ப எடுக்கல்லைன்னேன்”
படிச்சேன் பிடிச்சிருக்கு 
நண்பர் 1: என்ன சார் தலை கொழுக்கட்டை மாதிரி வீங்கியிருக்கு ?

நண்பர் 2: இனிமே 'அடிக்கவே மாட்டேனு' என் மனைவி தலையில் அடிச்சு சத்தியம் பண்ணினா!


நண்பர் : நீங்க போன பந்தியிலேயே உட்கார்ந்த மாதிரி தெரிஞ்சுதே ?

மற்றவர் : என்ன பண்றது ... பொண்ணு, மாப்பிளை ரெண்டு வீட்டுக்கும் நான் தெரிஞ்சவனா போயிட்டேன் !


முதலாளி: ஏண்டா! டின்ல எண்ணெய் குறையுது.
வேலைக்காரன்: டின் அடியில் சின்ன ஓட்டை இருந்திருக்கு. நான் கவனிக்கலே.
முதலாளி: டேய்! டின்ல மேலேதான் எண்ணெய் குறையுது. அடியில் ஓட்டை என்று கதை விட்டு என்னை ஏமாற்றவா நினைக்கிறாய்?

 படிச்சேன் புடிச்சிருக்கு :
நோயாளி : எனக்கு எப்ப உடம்புக்கு சரியில்லாமல் போனாலும் நான் உங்ககிட்டே தான் டாக்டர் வருவேன்!

டாக்டர் : காரணம் ...!

நோயாளி : உங்களுக்கு வர்ற ஒரே ஒரு பேஷண்டையும் அவளவு சீக்கிரம் சாகடிக்க மாடீங்கக்கிற நம்பிக்கையால் தான் !


படிச்சதில் பிடிச்சதல் இது சுட்டது

மாப்பிள்ளை வீட்டார்: பொண்ணு புடிச்சிருந்தா தான் சாப்பிடுவோம்.

பெண் வீட்டார்: பொண்ணு புடிச்சிருக்குன்னு சொன்னாதான் சமையலே ஆரம்பிப்போம்..!
படிச்சதில் பிடிச்சதல் இது சுட்டது


நீங்க சமயத்துல செஞ்ச உதவிக்கு என் தோலை செருப்பா தைச்சுப் போடணும் சார்....

வெரிகுட்! என் செருப்பு அளவு எட்டு. மறந்து பெரிசா தைச்சுடாதீங்க....
படிச்சதில் பிடிச்சதல் இது சுட்டது
தொழிலாளி  : முதலாளி.. எனக்கு கல்யாணமாயிருச்சு.. கொஞ்சம் சம்பளத்தை சேர்த்துக் கொடுங்க..

முதலாளி : கம்பெனி வளாகத்துக்கு வெளியே நடக்கற விபத்துகளுக்கு நான் நஷ்ட ஈடு தர இயலாது..!
படிச்சதில் பிடிச்சதல் இது சுட்டது
நண்பனுக்கும், நல்ல நண்பனுக்கும் என்ன வேறுபாடு..?

நீங்க உடம்பு சரியில்லாம, மருத்துவமனையில் இருந்தா,
நண்பன் சொல்லுவான்,, " சீக்கிரம் குணமடைஞ்சு வீட்டுக்கு வரணும்டா..!

நல்ல நண்பன் சொல்லுவான்.. " நர்ஸ் டக்கரா இருக்கா மாப்ளே.. கொஞ்சம் ஆற அமர டிஸ்சார்ஜ் ஆவு..!

இது சுட்டது.....

புதன், 22 ஜூன், 2011

உன் கனத்த மௌனத்தால் 
வசந்தத்தை எதிர்நோக்கும் 
என் வாழ்க்கை 
வழி தேடி தவிக்கிறது 
வலியுடன் துடிக்கிறது 
உன்னிடம் அன்பை 
மட்டும்தானே எதிர்பார்த்தேன் 
ஏன் வன்முறையை 
விழிகள் மூலம் ஏவி விடுகிறாய்?
என்  மனதை
சிதைத்த  உன்  விழிகளுக்கு
என்ன தண்டனை தருவது
என் பிழைகளை
ஒப்புக்கொண்ட பிறகும்.... 

திங்கள், 20 ஜூன், 2011


வளர்பிறை முழுநிலவாய் மாறுகிறது...
முழுநிலவு அமாவாசையை நோக்கி தேய்கிறது...
அறிவியலால் புரிந்து கொள்ளமுடிகிறது...

ஆனால் பெண்ணே...
உன் அன்பு அமாவாசையா? முழுநிலவா?
புரிந்துகொள்ள முடியவில்லை 
விஞ்ஞானத்துக்கும் விளங்கவில்லை

மௌனம் கலைந்து 
உன் பூவிதழ் உதிர்க்கும் 
வார்த்தைகளில்தான் 
வினாவுக்கு விடை மட்டுமல்ல 
என் வாழ்க்கையும் இருக்கிறது...
வளர்பிறை முழுநிலவாய் மாறுகிறது...
முழுநிலவு அமாவாசையை நோக்கி தேய்கிறது...
அறிவியலால் புரிந்து கொள்ளமுடிகிறது...

ஆனால் பெண்ணே...
உன் அன்பு அமாவாசையா? முழுநிலவா?
புரிந்துகொள்ள முடியவில்லை 
விஞ்ஞானத்துக்கும் விளங்கவில்லை

மௌனம் கலைந்து 
உன் பூவிதழ் உதிர்க்கும் 
வார்த்தைகளில்தான் 
வினாவுக்கு விடை மட்டுமல்ல 
என் வாழ்க்கையும் இருக்கிறது...

கண்களால் தேடினேன் 
தெரியவில்லை....
காதுகளால் தேடினேன் 
கேட்கவில்லை ....
கைகளால் துழாவினேன் 
அகப்படவில்லை....
அன்பே உன்னிடம் 
உள்ள காதலை....

மனத்தால் தேடியிருந்தால் 
கிடைத்திருக்குமோ...

வியாழன், 16 ஜூன், 2011


நீ கல்லூரி சிட்டாய்
கலக்கிய காலம் முதல்
கனவுலகில் உன்னோடு
கைகோர்த்து நடந்தவன்...

உன் தாவணி காற்றினில்
தென்றலை சுவாசித்தவன்...
நீ சுடிதார் துப்பட்டாவிற்கு
மாறியபோது மூச்சடைக்க
மலைத்து நின்றவன்....

கரைந்தோடிய காலங்களை
சபித்துக்கொண்டு இன்னும்
காத்திருக்கிறேன் உனக்காக....
கண்ணீர் மழை மட்டும்
கரைத்துக் கொண்டிருக்கிறது என்னை..


கல் மனம் கொண்டவளா நீ?
உன் கல் மனதை செதுக்கி
என்னுருவை படைத்து விடுகிறேன்....
காலங்கள் பல கடந்தாலும்
கனியும் என் காதல்...

புதன், 8 ஜூன், 2011

தஞ்சாவூர் - தனஞ்செயன் என்ற மன்னன் ஆட்சி செய்த இடம். தனஞ்செயன் ஊர் = தஞ்சாவூர். தனஞ்செயன் முத்தரையர் வம்சத்தை சேர்ந்தவர். அதன் பின்னரே சோழர் காலத்தில்,அவர்கள் தஞ்சாவூர் தலைநகராக மாற்றிகொண்டனர்.
அதே போல் முத்துராசாபட்டினம் மருவி மதராசாபட்டினமாக மாறியது. சென்னப்ப நாயக்கர் ஆட்சி செய்த பகுதியே சென்னியப்ப பட்டினமாக மருவி காலப்போக்கில் சென்னைபட்டினமாக மாறி இன்று சென்னையாக உள்ளது.
வானத்தையும் தொட்டுவிடலாம் 
காதலி அருகிலிருந்தால் கனவில் மட்டும்!

சிகரத்தையும் தொட்டுவிடலாம் 
உறவுகள்  அருகிலிருந்தால் உண்மையில் !

லட்சியத்தை வெற்றி கொள்ளலாம் 
உண்மையான நட்பு உடனிருந்தால்........
வடிவேல் கொடுத்த சாபம்தான் ரஜினியை இந்த பாடுபடுத்துகிறதாம். நேத்து டீ கடைக்கு  போனப்ப ரெண்டு புத்திசாலிங்க இதைப்பத்தி பேசிக்கிட்டாங்க. அட, அதாங்க, ராணா படத்துல வடிவேலுக்கு வாய்ப்பு தரலேல அதனால வடிவேலு ''பிரஸ்'' கிட்ட ''ராணாவாவுது , கானாவாவுது'' ன்னு சொன்னருல்ல அதான் மேட்டராம்.  

திங்கள், 6 ஜூன், 2011


தெருக்களில் இறைந்து கிடக்கும் குப்பைக்கும் ஓடும் சாக்கடை நீருக்கும் 
நாம் பொறுப்பில்லை, அரசுதான். குப்பைகளை தெருக்களில் வீசுவது மட்டுமே 
நம் வேலை! தெருவை சுத்தமாக வைத்துக் கொள்வதில் இல்லை. வோட்டு போட்டு இருக்கோம்ல. கவருமெண்டுதான் நமக்கு வேண்டிய எல்லாம் செய்யணும். 

பஸ்ஸின் ஜன்னல் ஓரம் சீட் வேண்டும். அடம்பிடித்தாவது இடம் பிடிப்போம். பான்பராக் போட்டு எச்சிலை துப்ப. நமக்கு பின்னால் இருப்பவன் மீது எச்சிலை  பன்னீராய் தெளிப்போம். யார் தட்டிக்கேட்பது? நாம யாரு? எவ்வளவு பெரிய ஆளு? கேட்டுவங்களா? 

தெருக்குழாயில்  தண்ணீர் வருகிறதோ இல்லையோ சண்டைவரும். சண்டையிட்டால்தான் குடம் நிரம்பாவிட்டாலும் நம் மனம் நிரம்பும். நாலு வார்த்தையாவது எதிரியின் குடும்பத்தை நாறவார்த்தைகளால் திட்டவேண்டும். குடும்பமே நமக்கு சப்போர்ட் செய்யணும். என்ன நாம வீர பரம்பரையில்லையா?

இதையெல்லாம் செய்யறவங்க நல்லா படிச்சவங்கதான். தன்னலம் மட்டுமே குறிக்கோளா கொண்டவங்க. அப்பறம் எப்படிங்க நாடு முன்னேறும்? 

மாறவேண்டும் எல்லாமும் 
மாற்றம் உன்னிடம் இருந்தே 
தொடங்க வேண்டும்........

உன்னை நீ மாற்றிக்கொள்ளாமல் 
மற்றவரை குறை சொல்வதில் 
பயனொன்றும் விளையப் போவதில்லை.

கையூட்டு கொடுக்காமல் 
உன் காரியங்களை வெல்லப்பார்!
லஞ்சம் அஞ்சி ஓடும்......

நீ மற்றவருக்கு செய்யும் உதவி
பிறவியின் பலன் - பிறருக்காக
பலனை எதிர்பார்க்காமல் உதவு...

மற்றவருக்கு முன் உதாரணமாய் 
வாழ்க்கையை அமைத்துக்கொள் 
பயணம் செய் உன் பாதையில்...

லட்சிய வேள்வியில் நிச்சயம் 
வெல்வாய்! உனக்குப் பின்னால் 
அணிவகுக்கும் சேனைகள்...

வையத்தலைமை தேடிவரும்
வான்புகழ் மாலையிடும் 
வாழ்க்கை வசந்தமாகும்... 

கடவுளிடம் கேட்க வேண்டும் 
நீ விந்தையானவனா?

இயற்கையை படைக்கையில் 
உன் மனநிலை என்ன?

அழகாய் படைக்கிறாய் -ஆனால் 


என்ன நினைத்து 
மனிதனைக் கொண்டு 
இயற்கையை அழிக்கிறாய்?

ஞாயிறு, 5 ஜூன், 2011

வாழ்க்கையின் 
ஏற்றம் இறக்கங்களை 
உணர்த்தும் 
உயர்ந்தும் சரிந்தும் 
வளைந்தும் நெளிந்தும்  
செல்லும் பாதைகள் 


இரு துளி
என் கண்ணிலிருந்து வழிந்தாலே
தாங்கிக்கொள்ள மறுக்கிறது
அம்மாவின் இதயம்....


அனைவரின் மனமும்
மகிழ்கிறது
கருத்த மேகம் மட்டும் ...
மழையை பொழிந்தால்...

இரண்டுமே வெவ்வேறா?

தண்ணீர்தானா?