வளர்பிறை முழுநிலவாய் மாறுகிறது...
முழுநிலவு அமாவாசையை நோக்கி தேய்கிறது...
அறிவியலால் புரிந்து கொள்ளமுடிகிறது...
ஆனால் பெண்ணே...
உன் அன்பு அமாவாசையா? முழுநிலவா?
புரிந்துகொள்ள முடியவில்லை
விஞ்ஞானத்துக்கும் விளங்கவில்லை
மௌனம் கலைந்து
உன் பூவிதழ் உதிர்க்கும்
வார்த்தைகளில்தான்
வினாவுக்கு விடை மட்டுமல்ல
என் வாழ்க்கையும் இருக்கிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக