புதன், 22 ஜூன், 2011

உன் கனத்த மௌனத்தால் 
வசந்தத்தை எதிர்நோக்கும் 
என் வாழ்க்கை 
வழி தேடி தவிக்கிறது 
வலியுடன் துடிக்கிறது 
உன்னிடம் அன்பை 
மட்டும்தானே எதிர்பார்த்தேன் 
ஏன் வன்முறையை 
விழிகள் மூலம் ஏவி விடுகிறாய்?
என்  மனதை
சிதைத்த  உன்  விழிகளுக்கு
என்ன தண்டனை தருவது
என் பிழைகளை
ஒப்புக்கொண்ட பிறகும்.... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக